திமுகவில் உருவாக்கப்படும் புதிய பொறுப்பு! முடிவுக்கு வரும் சகாப்தம்! எதிர்பார்ப்பில் இருக்கும் திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


வருகின்ற பத்தாம் தேதி நடைபெற இருக்கும் தி,மு.க. பொதுக் குழுவில் கட்சியின் அமைப்பிலும், செய்லபாட்டிலும் சில மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்பு உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. பொதுக்குழுவில் முதன்மை பேசுபொருளாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

அதே சமயம் இன்னொரு விவகாரம் குறித்தும் பேச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். தற்போது கட்சியின் பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் வயது மூப்பு, உடல்நிலை கருதி, அவர் பெயரில் வரும் கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்புகளுக்கு விடுப்பு கொடுத்து வேறு வழிகளை தேட திமுக ஆரம்பித்துள்ளது. 

முன்பு தலைவராக இருந்த கலைஞருக்கு வயது மூப்பு ஏற்பட்ட போது, செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் போல, பொதுச் செயலாளருக்கு உதவியாக, பொறுப்பு பொதுச் செயலாளர் என்கிற பதவியை உருவாக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கட்சித் தலைவரே பொதுச் செயலாளரின் பணியையும் சேர்த்து கவனிக்கலாமா? என்றும் யோசனையையும் செய்து வருகின்றனர். 

பொறுப்பு பொது செயலாளர் என போனால், மீண்டும் திமுக சீனியர்களிடையே யுத்தம் வெடிக்கும் என்பதால் அதனை தவிர்க்க பொதுசெயலாளர் பொறுப்பையும் ஸ்டாலின் கவனிக்கவே அவரது குடும்பத்தினர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk general Secretary will not change now


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->