மீட்பு பணியில் ஈடுபட்ட, இந்திய ராணுவத்தினருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.. விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்ற பகுதில் மலையேற்றம் சென்ற இளைஞர் பாபு, கால் தடுக்கி கீழே விழுந்து மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார். இரண்டு நாட்கள் தண்ணீர், உணவின்றி தவித்த பாபுவை ராணுவத்தினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நேற்று மீட்டனர். 

இந்நிலையில், பாபுவை மீட்ட ராணுவத்தினருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில், கடந்த திங்கட்கிழமையன்று மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து, இரண்டு குழுக்களாக பிரிந்து, ராணுவத்தினர் அவரை மீட்கும் பணியில் நேற்று நள்ளிரவு முதல் தீவிரமாக ஈடுபட்டு, இளைஞர் பாபுவை பத்திரமாக மீட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட, இந்திய ராணுவத்தினருக்கு  நன்றிகளையும் & பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk vijayakanth thanks for indian army


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->