இடைத்தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தார் விஜயகாந்த்!  - Seithipunal
Seithipunal


தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஆதரவை தெரிவிக்கிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்கு பணியாற்றி, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

முன்னதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி.K.பழனிச்சாமி (25.09.2019) மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடைபெற இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த், கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரிடம் ஆதரவு கேட்டுக்கொண்டதுடன், அதிமுக அமைச்சர்கள் மின்சாரத்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்கள், மீன்வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் திரு.சீனிவாசன் அவர்கள் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk support admk in by election alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->