திமுக ஆட்சி என்றாலே "வன்முறை" என்பது தான் வரலாறு!
DMDK premalatha criticized DMK regime
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தர்மபுரிக்கு வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் "தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. குடியரசுத் தலைவர் தமிழகம் வருகையின் போது நடை பெற்ற பெட்ரோல் குண்டு வீழ்ச்சி சம்பவம் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை கொண்டு வருவார்கள் என்பது தான் வரலாறு.
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க அதனை தடுக்கும் கடமை தமிழக அரசிடம் தான் உள்ளது" திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
DMDK premalatha criticized DMK regime