தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு.!!
dmdk meeting on dec 6
வருகின்ற 6ஆம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த மாதம் இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அனைத்து கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். எனவே, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.