#தமிழகம் || நோட்டு கொண்டுவரவில்லை.., பள்ளி மாணவனை போட்டு தாக்கியதாக ஆசிரியர் மீது புகார்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன் லியோராகுல். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சார்லஸ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.  

மாணவன் சார்லஸ் நோட்டு கொண்டுவரவில்லை என்பதால் ஆங்கில ஆசிரியர் அந்த மாணவனை அடித்துள்ளார்..இதனை மாணவன் சார்லஸ் தனது வீட்டில் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு மாணவன் சார்லஸ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 

பின்னர், அவர்கள் மாணவன் சார்லஸ்ஸை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாணவன் சார்லஸ் தெரிவிக்கையில், "ஆசிரியர் அடித்ததில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெஞ்சுவலி வந்தது." என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul School student attacked


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->