அதிமுகவினரால் தான் வடிவேலு நடிக்கவில்லையா.?! திடுக்கிடும் தகவல்.!
dhinakaran speech about admk
டிடிவி தினகரன் வடிவேலு நடிப்பதை நிறுத்த காரணமே, அமைச்சர்களின் நகைச்சுவையான பேச்சு தான் என தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் தேவகோட்டையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தினகரன், "ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பது உண்மைதான். ஆனால், வெற்றிடத்தை நிரப்ப யார் வருவார் என்பதை சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அடையாளம் காட்டுவர்.
அதிமுக அரசானது, நாள் மற்றும் நட்சத்திரம் பார்த்து கொடுக்கும் தேதியில்தான் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஸ்டாலின் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார். அவருக்கு தேர்தலை நிறுத்தும் எண்ணம் இல்லை.
அதிமுக காரர்கள் இம்சை அரசர்கள் மாதிரி நகைச்சுவைப் பேச்சை மேற்கொள்வதால் தான், வடிவேலு தற்போது நடிப்பதில்லை. புகழேந்தி பணம் வாங்கிக் கொண்டு தான் இவ்வாறு பேசுகின்றார். ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்க அதிகாரம் யாருக்குமே இல்லை. அவர் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு ஆதரவு கொடுப்பது குறித்து பின்னர் முடிவு செய்வோம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
dhinakaran speech about admk