உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் அதிர்ச்சியில் மூழ்கிய திமுகவினர்.. முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்.!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் பேகாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குட்டப்பட்டி, பட்டகப்பட்டி கிராமங்களை சேர்ந்த திமுக கிளை நிர்வாகி பழனி மற்றும் தேமுதிகவை சேர்ந்த தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். 

அதிமுகவில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கழகத்தில்  இணைத்துக் கொண்டா.ர் இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூக்கடை ரவி, தர்மபுரி கூட்டுறவு சங்க தலைவர் வெற்றிவேல், நல்லம்பள்ளி மேற்கு அம்மா பேரவையின் முக்கிய நிர்வாகி பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் திமுகவினர் அதிமுகவில் இணைந்த சம்பவம் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இது திமுகவினருக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharmapuri dmk member join admk


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->