தேவர் சிலையின் தங்க கவசம் - தனியார் வாங்கி தரப்பில் வெளியான தகவல்! ஓபிஎஸ் தரப்பின் நிலைப்பாடு என்ன?!
devar gold kavasam issue admk ops vs eps
கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13 கிலோ எடை உள்ள தங்க கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வழங்கினார்.
இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குரு பூஜையின் போது, அதிமுக சார்பில் தேவர் தங்க கவசம் தனியார் வங்கியில் இருந்து பெற்று தரப்படும்.
அந்த வகையில் இந்த வருடம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரி உள்ளார்.
கடந்த வாரம் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரி கடிதம் மற்றும் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பித்துள்ள திண்டுக்கல் சீனிவாசன், நேற்று நேரடியாக வங்கிக்கு சென்றார். தொடர்ந்து தேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோருவதற்கான அலுவல் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையின் தங்க கவசத்தை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசலிடம் ஒப்படைப்பது குறித்து, மதுரை தனியார் வங்கி பரிசளித்து வருவதாக தெரிவித்துள்ளது.
கொடுக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்ட தனியார் வங்கி நிர்வாகம், தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி அது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் உரிமை கோரவில்லை என்று தெரிகிறது. ஒருவேளை ஓபிஎஸ் தரப்பு நீதிமன்ற, தேர்தல் ஆணைய உதவியோடு உரிமைகோரலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்க்கு வாய்ப்பு மிக குறைவே என்ற அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
devar gold kavasam issue admk ops vs eps