கூட்டணியை சிதறாமல் பார்த்து கொள்ளுங்கள்., திமுகவுக்கு 'வார்னிங்' கொடுத்த கூட்டணி கட்சி.! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், விசிக, மனிதநேய மக்கள் கட்சியுடனும் கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிவாகியுள்ளது. 

அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், விசிகாவுக்கு 6 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து நேற்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இந்திய கம்னியூஸ்ட் கட்சி நடத்தியது. இதில் இந்திய கம்னியூஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக எங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எப்பிற்று ஒற்றை காலில் நின்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்காக காத்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், நேற்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், "திமுக கூட்டணியை சிதறவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்" என்று மறைமுகமாக திமுகவுக்கு வார்னிங் கொடுத்துள்ளார். 

இதற்கிடையே, இன்னும் சற்று நேரத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. திமுகவின் தலைமை அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM WARN TO DMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->