காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றன. மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. 

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அதே சமயத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்க்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நோய்தொற்று உறுதியாகி உள்ளது.

இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona possitive congress vip


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->