“இந்தியா ஒரு போலீஸ் நாடு. மோடிதான் அதன் ராஜா" - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடும் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


இன்று காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடந்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், நாட்டில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்கட்சித் தலைவர்கள் மிரட்டுவதை கண்டித்தும் தலைநகர் டெல்லியின் ராஜபாதையில் அமர்ந்து ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார்.

போராட்டம் காரணமாக ராகுல் காந்தியை தடுப்புக் காவலில் டெல்லி போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கே.சி.வேணுகோபால், இம்ரான் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, போலீசாரின் இந்த கைது நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி தெரிவிக்கையில், “சர்வாதிகார போக்குடன் மத்திய அரசு ஆட்சி செய்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தவித விவாதத்தையும் அனுமதிக்க மறுக்கிறார்கள். 

மக்களுக்காக போராட்டம் செய்தால் தலைவர்களை கைது செய்கிறார்கள். இந்தியா போலீஸ் நாடாக மாறிவிட்டது. மோடிதான் அதன் ராஜா” என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mp rahul gandhi say about pm modi and india


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->