பஞ்சாப் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள பக்வந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பகவான் இன்று பதவியேற்கிறார். கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடைய செய்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

முதலமைச்சர் பதிவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். பஞ்சாப் மக்கள் திரளாக பங்கேற்கும்படி தூரி அழைப்பு விடுத்துள்ளதாக சுமார் 5 இலட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள பக்வந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்கும் பக்வந்த் மானுக்கு வாழ்த்துகள். இந்திய ஒன்றியத்தில் மொழிவாரி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகள் பற்றி குரல் கொடுத்த நீண்ட வரலாற்றை தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் கொண்டுள்ளன. புதிய பஞ்சாப் அரசுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin wish for bhagwant mann


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->