தமிழகத்துக்கு பெரும் ஆபத்து., பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.,! - Seithipunal
Seithipunal


கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவு குறித்து, மாநில அரசுடன் கலந்து கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், முதல்வர் முக ஸ்டாலின் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கழிவுகளை சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள், ஆபத்துகள் தொடர்பான மக்களின் அச்சத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அணு கழிவு மையம் தொடர்பாக தமிழக மக்களிடையே உள்ள கவலையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நலனை கருத்தில் கொண்டு, கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin letter to pm modi for koodankulam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->