களிமேடு தேர் விபத்து நடந்த இடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சதயவிழா தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் 

15 அடி உயரம் கொண்ட தேர் செல்லும் பாதையின் ஓரத்திலும், குறுக்கிலும் மின் கம்பிகள் செல்கின்றன. மின் கம்பிகள் தாழ்வாக செல்லும் இடங்களில் மின்சாரக் கம்பியைத் தூக்கிப் பிடித்து தேர் செல்வதற்கு  வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தேரோட்டம் முடிந்து திரும்பும் போது எதிர்பாராத விதமாக தேரின் உச்சி  மின்சாரக் கம்பியில் பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளது. அதுமட்டுமின்றி அப்பரை வழிபடுவதற்காக மக்கள்  ஊற்றிய தண்ணீர் சாலையில் தேங்கி நின்றதால் அதன் வழியாகவும் மின்சாரம் பாய்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

மேலும், தேர் விபத்து நடந்த இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, விபத்து குறித்து அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கம் அளித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin in kalimedu accident place


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->