மக்கள் நம் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுங்கள் - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களில் எந்த தொய்வும் இல்லாமல் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று, அரசு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பேருந்து நிலையத்தில் குடிநீர் மற்றும் சாலைத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும் என்றும், திட்ட செயலாக்கத்தின் போது மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை முதலமைச்சர் சவழங்கினார்.

குறிப்பாக, மக்கள் நம் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களில் எந்த தொய்வும் இல்லாமல் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றும், துறை அமைச்சர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து நிறைவேற்றிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தாமதமான திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Advice to Govt Staffs May


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->