தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை., முக்கிய முடிவை அறிவிக்க போகும் முதலமைச்சர்!!
cm meeting for water problem
இந்த வருடம் பருவ மழை பொழித்து போனதால் போதிய மழை இல்லாமல் மக்கள் குடிக்க குடிநீர் கூட இல்லமல் மக்கள் தவித்துவரும் நிலையில், மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன
இந்தநிலையில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது, இக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க, மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது, குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது, மேலும் நேற்று கேரள முதல்வர் ரயில் மூலம் தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார் இது தொடர்பாகவும் முதலமைச்சர் முடிவெடுப்பார் என தெரிகிறது.
English Summary
cm meeting for water problem