நாளை திமுக பேரணி! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!  - Seithipunal
Seithipunal


நாடுமுழுவதும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பேரணி நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அழைப்புகளும் 98 அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை நடத்தவிருக்கும் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் மன்றத்தின் வாராகி என்பவர் தொடர்ந்த இந்த மனுவானது அவசர வழக்காக இன்று இரவு 8 மணிக்கு விசாரணைக்கு வந்தது.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா சிறப்பு அமர்வு விசாரணை செய்தது. இரவு 8 மணியளவில் உயர்நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. 

மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பேரணியில் கலந்து கொள்ளும் அமைப்புகளின் பட்டியல் அளிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் அனுமதித்த பாதையில் மட்டுமே பேரணி செல்ல வேண்டும். சட்டம் ஒழுங்கு காவல்துறை ட்ரோன்  கேமராக்களை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் நடக்காதவாறு கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court give permission to dmk rally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->