ஓட ஓட ரவுடி வெட்டிபடுகொலை.! சென்னை அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி, ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு, முருகேசனார் தெருவை சேர்ந்தவர் விக்கி. இவர் மீது பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக கஞ்சா விற்பனை, வழிப்பறி கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது.

மேலும், அந்த பகுதியில் அவர் ரவுடியாக தன்னை வலம் வந்துள்ளார். இவருக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கவே, சிறிது காலம் சென்னையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை ஒன்றுக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, பின்னர் ஓமலூர் பகுதியில் உள்ள அவரின் மாமியார் வீட்டுக்கு சென்று உள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

கொலை செய்யப்பட்ட விக்கிக்கும், செங்கல்பட்டை சேர்ந்த அன்வர் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chengalpattu rowdy vikki murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->