தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஏன் ஒதுக்கவில்லை..? மத்திய அரசு விளக்கம்..!
Central government explains why education funds were not allocated to Tamil Nadu
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறி்த்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன் போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக 25 சதவீத ஏழை மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் பல மாநிலங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், "ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மையைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வரும் 28-ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Central government explains why education funds were not allocated to Tamil Nadu