த.மா.கா வேட்பாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் விஜய குமார ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் நேற்று இரவு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரவுண்டானா பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இதற்காக காங்கேயம் பேருநது நிலையத்திலிருந்து போலீஸ் ரவுண்டானாவரை சாலையின் சென்டர் மீடியேட்டரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை கட்டியுள்ளனர். 

 

இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து தேர்தல் பிறக்கும் படை அதிகாரி ராகவேந்திரா தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் களத்தில் இறங்கி விசாரணை நடத்தியதில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் நடுவே குடிகள் கட்டப்பட்டது தெரியவந்தது. 

அதன் பேரில் வேட்பாளர் விஜயகுமார் காங்கேயம் தாலுகா செயலாளர் தர்மராஜ் மற்றும் நிர்வாகி சுரேஷ்குமார் ஆகியோர் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against Tamil Manila Congress candidate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->