பிரச்சாரம்! கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு சொந்த வீடு, நிலம்...! - எடப்பாடி பழனிச்சாமி
Campaign Poor people living on temple land will get their own houses and land Edappadi Palaniswami
தஞ்சையில் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ''எடப்பாடி பழனிசாமி'' அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"டெல்டா மாவட்டங்களில் கோவில் நிலம் அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தால் கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, நிலத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலம் தந்து, அரசு சார்பில் வீடும் கட்டித்தரப்படும்" என்று தெரிவித்தார்.இதற்கு முன்னதாக கோவில் பணத்திலிருந்து அரசு கல்லூரிகள் கட்டுவது தவறு என்று ''எடப்பாடி பழனிச்சாமி'' தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Campaign Poor people living on temple land will get their own houses and land Edappadi Palaniswami