#BREAKING : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்கிறது பாஜக.!
BJP rule in utharakhand
உத்தர பிரதேசம் பஞ்சாப் கோவா மணிப்பூர் உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி,
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் பாஜக 44 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 1 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இதனையடுத்து உத்தரகண்ட் மாநிலத்திலும் மீண்டும் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக வாய்ப்புள்ளது.
உத்தரகண்ட் மாநில தேர்தல் வரலாற்றில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்ததில்லை. தற்போது உத்தர்கண்டில் ஆட்சியை தக்க வைப்பதன் மூலம் அந்த சாதனையை படைக்கிறது பாரதிய ஜனதா.