வரும் தேர்தலில் பாஜக தனித்து போட்டி.. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு.!
bjp no alliance for upcoming election
மும்பையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியவை, மகாராஷ்டிராவில் அடுத்த தேர்தலில் பாஜக தனித்தும் பிற கட்சிகள் ஓரணியில் போட்டியிடும்.
அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி பெறும் என கூறினார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி என்றும் மராத்திய பேரரசர் சிவாஜியையும், வீர சவார்க்கரையும் அவமதிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் போதிலும் அதைக் கண்டும் காணாம முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இருப்பதாக குற்றம் சாட்டினார்.
சித்தாந்த விவகாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பாஜக நிலைப்பாட்டை மாற்றியது இல்லை. திருப்திப்படுத்தும் கொள்கையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை எனவும் ஜே.பி. நட்டா கூறினார்.
English Summary
bjp no alliance for upcoming election