கீ.வீரமணி "தாலி அறுக்கும்" போது பாத்துட்டு தானே இருந்தீங்க? - எகிறி அடிக்கும் பாஜக.!! - Seithipunal
Seithipunal


இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடந்த பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி "ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக நாட்டின் செல்வத்தை மறு மதிப்பீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் அனைவரது சொத்துக்களையும் கணக்கிடும். நமது பெண்களின் தாலி உட்பட அனைத்து தங்கத்தையும் கைப்பற்றி விடுவார்கள். பிறகு அதை மறுமதிப்பீடு செய்து ஊடுருவல்காரர்களுக்கு தருவது அவர்களின் தேர்தல் வாக்குறுதி" என பேசியது சர்ச்சையை கிளப்பியது. 

இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலர் தங்கள் பதிலடியை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நிதி அமைச்சர் பா சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் "தோல்வியின் பயம் காரணமாக பாஜக தலைவர்கள் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். கோவில் சொத்துக்களை தங்கத்தை தாலியை காங்கிரஸ் கைப்பற்றி மதிப்பீடு செய்யும் என்ற கூற்று என்ன விளக்குகிறது? 

பாஜகவின் தீவிர ஆதரவாளர்கள் கூட இந்த அர்த்தமற்ற பேச்சுக்களை நம்ப மாட்டார்கள். இந்த பேச்சு குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறார்கள்" என விமர்சனம் செய்திருந்தார். அதற்கு தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி "தாலியா இருக்கும் போராட்டத்தை கீ.வீரமணி நடத்திய போது பார்த்துக்கொண்டு தானே இருந்தீர்கள்" என பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan reply to chidambaram comments


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->