தமிழகம் ஒரு ஆன்மிக பூமி., பாஜக தலைவர் ஜேபி நட்டா.!
BJP JP NATTA IN TN
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார் என்று, பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழாவை முன்னிட்டும், துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவை முன்னிட்டும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழகம் வந்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் பாஜக தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் வரும் காலம் பாஜக தான் பிரதானமாக இருக்கும். இதன் காரணமாகத்தான் பல்வேறு துறையினரும் தற்போது பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் ஆகும். தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. மிகப்பெரிய ஆசான் திருவள்ளுவர். அவரது புகழ் நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது." என்று தெரிவித்தார்.