அரசியல் பரபரப்பு: வேட்பு மனு தாக்கல் செய்த அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க சார்பில் சிவகங்கை ராமச்சந்திரன், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார், பா.ஜ.க சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிட உள்ளனர். 

இந்நிலையில் இன்று பா.ஜ.க மாநில தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கே. அண்ணாமலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதற்கு முன்னதாக பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்களுடன் அண்ணாமலை ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP candidate Annamalai nomination filed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->