நாளையே முதல்வராக பதவியேற்கும் நிதிஷ்குமார்?! வெளியான தகவல்.!
Bihar Politics nitish cm
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில், கடந்த சட்டமன்ற தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 இடங்களும், பா.ஜனதாவுக்கு 77 இடங்களும் கிடைத்தது.
அதிக இடங்களில் பாஜக வென்றாலும், தேர்தல் ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆனார். கூட்டணி ஆட்சி நன்றாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், நிதிஷ்குமார் சில கோரிக்கைகளை முன்வைக்க, அதற்க்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்க, பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் விரிசல் விழுந்தது.
இந்த நிலையில், இன்று பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அளுநர் பாகு செளகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார்.
ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின் நிதிஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஒருமித்த கருத்து" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் மீண்டும் முதல்வராக, ஆட்சி அமைப்பது குறித்து ஆளுநர் பகு சௌஹானை, நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் கூட்டாக சென்று உரிமை கோரி உள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் இருவரும் ஆளுநரை சந்தித்து உள்ளனர்.
160 எம்.எல்.ஏ.க்கள் நிதீஷ் குமார் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்தால், மாநில முதல்வராக நிதீஷ் குமார் நாளையே பதவியேற்பார் என்றும் சொல்லப்படுகிறது.