#சற்றுமுன் || விராட் கோலியின் 100-வது டெஸ்ட்., ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டம் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் ஆட்டமாகும்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை குறைந்துள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. 

கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்றஇந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவில்லை.

மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்நிலையில், மொகாலியில் வரும் 4ஆம் தேதி தொடங்கும் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண 50% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி பிசிசிஐ  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய வீரர் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பிசிசிஐ இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI INDvsSL


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->