#தமிழகம் || பணமோசடி வழக்கில் வேட்பாளர் அதிரடியாக கைது.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர், பண மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் நகராட்சியில் 16வது வார்டு சுயேச்சை வேட்பாளர் மணிவேல் என்பவர், பண மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாகிர் உசேன் என்பவரின் கடையில் இரும்பு கம்பி வாங்கி விட்டு, சுமார் 4 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் தராமல் ஏமாற்றியதாக மணிவேல் மீது ஜாகிர் உசேன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று அவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

அதிமுக பிரமுகரான மணிவேல், அதிமுக சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்து இருந்தார்.

 

அவரின் வேட்புமனு தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் தற்போது தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது ஜாகிர் உசேன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை இன்று கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur independent candidate arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->