மோசடி செய்த ஸ்டாலின்... முன்னாள் அதிமுக அமைச்சரை காப்பாற்றிய அறிவாலய வாஷிங் மெஷின்... ஆதாரத்தோடு அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2013ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் பெருங்களத்தூரில் 1450 வீடுகள் கட்ட CMDAவிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்கிறது. 

2015-16 ஆண்டில் வைத்திலிங்கம் மகன் இயக்குனராக உள்ள Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குரூப்பின் Bharath Coal Chemicals Ltd நிறுவனத்திடம் இருந்து கடனாக (Unsecured Loan) 27.9 கோடி கொடுக்கப்படுகிறது. 

2014ம் ஆண்டு 36 லட்சம் பங்கு மூலதனத்துடன் துவக்கப்பட்ட Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 2020 வரை எந்த வருவாயும் (பூஜ்ஜியம்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2016ல் CMDA கட்டிட அனுமதி கொடுக்கிறது. அதே ஆண்டில் Muthammal Estates Pvt Ltd திருச்சியில் நிலம் வாங்க 18 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறது.

2017-19 ஆண்டுகளில் ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கிய தொகையில் Muthammal Estates Pvt Ltd மூலம் திருச்சியில் 24.2 கோடியில்  4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் வாங்குகிறார். 

இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2022 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அளிக்கிறது. இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 2024ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்கிறது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. 

2025ம் ஆண்டில் இந்த FIR அடிப்படையில் அமலாக்கத்துறை வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி மேலும் 100 கோடி சொத்துக்களை இணைக்கிறது. இதற்கு பிறகும் திமுக அரசு அசைந்து கொடுக்காமல் அமைதி காக்கிறது. 

2026ம் ஆண்டில் தான் திமுக அரசின் அமைதிக்கான காரணம் தெரிந்தது. வைத்திலிங்கம் திமுகவில் இணைகிறார். திமுக அரசு அவருக்கு எதிராக பதிந்த FIR அடுத்த ஒரே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. ஊழல் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற அறிவாலயத்தின் வாஷிங் மெஷின் உள்ளே போட்டு வைத்திலிங்கத்தை புனிதர் ஆக்கி விடுகிறார்கள். 

ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இந்த வழக்கை மூட போகிறோம் என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தாரரான அறப்போர் இயக்கத்திற்கு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அறப்போர் இயக்கத்திற்கு தெரியாமல் FIR ரத்து செய்ய பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளனர் . மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை மட்டும் புகார் தரராக காட்டி அவருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் புதிய ஆட்சியில் ஜூன் நான்கு அன்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அறப்போர் இயக்கத்திற்கு இந்த மோசடி தெரியவந்துள்ளது. 

அறப்போர் இயக்கம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை  மூடக்கூடாது என்று வாதிடும்" என்று தெரிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arappor iyakkam dmk mk stalin vaithiyalingam scam


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->