அதிமுகவில் மீண்டும் சலசலப்பு.. மூத்த தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்.!!
anwhar raajhaa sacked sacked from admk
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியும், அக்காட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளருமான அன்வர் ராஜா சமயத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்துக்களை வெளியிட்டார். மேலும், சசிகலாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது கடந்த 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது. இதனால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கும், அன்வர் ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அன்வர் ராஜாவுக்கும் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், அன்வர் ராஜாவுக்கும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியந்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து, கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, (கழக சிறுபான்மைமினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்), இன்று முநல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
English Summary
anwhar raajhaa sacked sacked from admk