பொய் சொல்வது திமுகவுக்கு கைவந்த கலை, அவர்களின் வாடிக்கை - போட்டு தாக்கிய அண்ணாமலை.!!
annamalai criticized dmk mkstalin 24122023
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க மறுப்பதாகவும், குறைவாக கொடுப்பதாகவும் திமுக [பொய் கூறி வருகிறது. அப்படி மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை. எந்த மாநிலமாக இருந்தாலும் சேதத்தின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.பாஜக ஆளும் குஜராத்தில் 2021ம் ஆண்டு ஏற்பட்ட புயல் பாதிப்பிற்கு ரூ.9,836 கோடி கேட்டனர் . மத்திய அரசு உடனடி நிவாரண நிதியாக 1000 கோடிகொடுத்தது. அதன் பிறகு மிச்சம் ரூ.8, 836 கோடி கொடுக்கவில்லை.
திமுகவுக்கு பொய் சொல்வது கைவந்த கலை, பொய் சொல்வதே அவர்களின் வாடிக்கை. நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல் உதயநிதி மத்திய அரசை வம்புக்கு இழுக்கிறார். மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. மத்தியக்குழு ஆய்வு செய்த பின் தென் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்ய வந்தார். நாளை மறுநாள் தூத்துக்குடியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிறார். வெள்ளப்பாதிப்பை சமாளிக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட நிதி விரைவில் வரும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
English Summary
annamalai criticized dmk mkstalin 24122023