அமமுகவின் முக்கிய நிர்வாகி காலமானார்.. வருத்தத்தில் டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நான்குநேரி ஒன்றிய மறுகால்குறிச்சி ஊராட்சி கழக செயலாளர் சங்கரன் காலமானார். 

இந்நிலையில், அமமுக ஊராட்சி கழக செயலாளர் சங்கரன் மறைவிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருநெல்வேலி மாநகர் மாவட்டம், நாங்குநேரி ஒன்றிய மறுகால்குறிச்சி ஊராட்சி கழக செயலாளர் சங்கரன் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ammk member passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->