செல்ப் எடுக்காத ஒரு கட்சி பாஜக தான்.. போட்டு தாக்கிய ஜெயகுமார்.!!
AIADMK jayakumar criticized BJP 03032024
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான்.
சமூக வலைதளங்களை நம்பியே தமிழ்நாட்டில் பாஜக அரசியல் செய்கிறது. அதிமுகவை யாராலும் உருட்டவோ மிரட்டவோ முடியாது. அதிமுகவுக்கு என தனித்தன்மை உள்ளது யாரையும் நம்பி இல்லை.
மக்களவைத் தேர்தலில் அதிமுக திமுக இடையே தான் போட்டி களத்தில் இல்லாத பாஜக என்ற கட்சியை பற்றி பேச்சுக்கே இடம் இலலை. அதிமுக தலைவர்களின் முகங்களை பாஜக எதற்கு முன்னிலைப்படுத்த வேண்டும்.. பாஜக தலைமை மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை இது காட்டுகிறது.
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் முகங்கள் அதிமுகவுக்கு தான் சொந்தம் அவர்களின் முகங்களை காட்டி ஓட்டு வாங்க நினைக்கும் அரசியலை பாஜக தற்போது கையில் எடுத்துள்ளது இது கண்டனத்திற்குரிய செயலாகும் தமிழ்நாட்டில் செல்ப் எடுக்காத கட்சி பாஜக மட்டும் தான்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
AIADMK jayakumar criticized BJP 03032024