CM ஆக தியானம்! ஓபிஎஸ் போலவே இரவோடு இரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த சம்பவம்!  - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, முக்கியமான கட்சிகள் தேர்தல் முன்னேற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளன.

பா.ஜ.க.வுடன் கூட்டணி கொண்டுள்ள அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன் தனது அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி கிட்ட வேண்டுமென்பதற்காக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவர், வழிபாடு செய்ததுடன், அதன் பின்னர் அமைதியான சூழலில் தியானம் மேற்கொண்டார்.

இது அ.தி.மு.க.வின் தலைமையை நோக்கிய அவரது உறுதியை வெளிப்படுத்தும் செயற்பாடாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது திடீரென ராஜினாமா செய்து, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் நள்ளிரவில் தியானத்தில் அமர்ந்த சம்பவம் அப்போது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது அதேபோல் ராஜேந்திர பாலாஜியின் தியானமும் அ.தி.மு.க. அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Rajendra Balaji Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->