#BigBreaking | அதிமுக பொதுக்குழு வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த ஓபிஎஸ்-ன் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில்,வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கட்சியின் திருத்த விதிகளை அங்கீகரிக்கவில்லை என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணையத்துக்கு நீங்கள் நோட்டீஸ் அளித்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர். தேர்தல் ஆணைய நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

அனைவரும் தயாராக இருந்தால் விசாரணை நடத்த நாங்களும் தயார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS VS EPS case SC 61222


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->