#BigBreaking | முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓபிஎஸ்.! பிரச்சனைக்கு முடிவுகட்டப்போகும் செய்தியாளர் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி கிடையாது என்றும், ஜூன் 23 க்கு முன்னதாக அதிமுக எப்படி இருந்ததோ அதே நிலைமை தொடரும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேலும், தீர்ப்பின் முக்கிய அம்சமாக அதிமுகவின் பொது குழுவை கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு கூட்டுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், ஆணையர் ஒருவரை நியமிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஆதரவாக வந்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நேற்று, தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "அதிமுகவை தனி ஒருவரால் சர்வாதிகாரமாக கைப்பற்ற முடியாது" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் அறிவிக்க போகும் அந்த முடிவு குறித்து வெளியான தகவலின் படி, அதிமுகவின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒன்றிலிருந்து செயல்பட ஓபிஎஸ் அழைப்பு விடுக்க விடுக்க உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

கட்சியை வலுப்படுத்த எடப்பாடிசாமி தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS press meet for eps call


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->