மீண்டும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்... மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்.!
admk ops letter to central minister july
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 5 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 7 மீனவர்கள், கடந்த 3ம் தேதி மாலை ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும் சிறை பிடித்து. அவர்களை விசைப்படகுடன் இலங்கை கொண்டு சென்று, கடற்படை முகாமில் ஒப்படைத்தனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள புதுவை, தமிழகத்தை சார்ந்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படை சிறை பிடித்தது குறித்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், தற்போது பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் மத்திய அமைச்சருக்கு எழுதியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
English Summary
admk ops letter to central minister july