அதிமுக உட்கட்சி தேர்தல் : சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பரபரப்பு மனு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்கக்கோரி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று, அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மனு ஒன்றை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதால் கே சி பழனிச்சாமி நீக்கப்பட்டார், எனவே அவர் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டுமென்று ஓபிஎஸ் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உறுப்பினர்களின் எண்ணிக்கையை பிரதிபலிப்பதாக கே சி பழனிச்சாமி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஓபிஎஸ் மனு மீதான இறுதி விசாரணை மார்ச் மாதம் 30ஆம் தேதி நடைபெறும் என்றுசென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK OPS CHENNAI HC K C PALANISAMI


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->