அதிமுகவில் நடந்த அதிரடி மாற்றம்.! ஓபிஎஸ் - இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
admk new announce nov 12
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "அதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன்,
* திருப்பூர் புறநகர் மேற்குமாவட்ட செயலாளராக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,
* திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.பி. சி.மகேந்திரன்,
* புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
* புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக பி.கே. வைரமுத்து,
* தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக எம்.பி., வைத்திலிங்கம்,
* விருநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன்,
* விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.