அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி-யை அதிரடியாக கைது செய்த போலீசார்! அரக்கோணத்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


அரக்கோணத்தில் எம்ஆர்எப் தொழிற்சாலையை சுற்றியுள்ள போராட்டம் வேகமெடுத்த நிலையில், அதிமுக எம்எல்ஏ சு. ரவி, முன்னாள் எம்பி கோ.அரி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சிப்புத்தூரில் இயங்கும் எம்ஆர்எப் ஆலைக் கடற்கரையிலுள்ள தற்காலிக தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று காலை தொழிற்சாலை நுழைவாயிலில் கூட்டம் நடத்த அதிமுக எம்எல்ஏ சு. ரவி, முன்னாள் எம்பி கோ.அரி, ஒன்றிய செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

ஆனால், நீதிமன்றத்தால் அங்கு கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் எச்சரித்தனர். இத்தடை எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, மூவரும் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வேனில் அழைத்து செல்லப்பட்டு, சாலை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK MLA Ex MP Arrested in Arakonam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->