அதிமுகவின் முக்கிய நிர்வாகிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. வழங்கப்பட்ட பதவி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள்  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனுடைய அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை போட்டியிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிக்கின்றனர். 

இந்நிலையில், தர்மபுரி மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர் பொறுப்பில், வெற்றிவேல் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk member new posting for party


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->