#சற்றுமுன் || அதிமுகவின் தலைவர் இவர்தான்... சற்றுமுன் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர், அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

"நடக்க உள்ள பொதுக்குழு கூட்டம் அது பொதுக்குழு அல்ல.. எடப்பாடி பழனிசாமியின் துதி பாடுகிற ஒரு கூட்டம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின் பொதுக்குழு பற்றி பேசுவோம். 

நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு உண்டான அழைப்பிதழ் எனக்கும் வந்திருக்கிறது. அந்த அழைப்பதில் யாருடைய கையெழுத்தும் இல்லை. அது உண்மையில் கட்சி கடிதம் தானா? அல்லது போர்ஜரி கடிதமா என்ற சந்தேகம் இருக்கிறது.

அந்த கடிதத்தில் நோய் தொற்று பரவல் அதிகமாக வீட்டிலேயே இருந்தபடி, கட்சி அலுவலகத்தில் இருந்தபடி காணொளி மூலமாக பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியும் நடக்கலாம், இப்படியும் நடக்கலாம் என்று கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சி எடப்பாடி பழனிசாமியின் துதி பாடுகிற ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு நான் சொல்ல மாட்டேன்.

எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைவர் கிடையாது. கட்சியின் தலைவர் அண்ணன் ஓ பன்னீர்செல்வம் தான். பிரச்சனைகள் ஆயிரம் இருக்கட்டும், 

சசிகலா மூலமாக முதலமைச்சரானார், அவரையும் தூக்கி எறிந்து விட்டார். அண்ணன் ஓ பன்னீர்செல்வம் ஆட்சியை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார். அவரையும் தூக்கி எறிந்து விட்டார். இப்போது கட்சியினுடைய பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என்பது அவரின் ஒரே குறிக்கோள்" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK KOVAI SELVARAJ PRESS MEET OPS VS EPS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->