மாறும் தேர்தல் களம்.. அலை வீசும் இரட்டை இலை.. திமுக கோட்டைக்கு ஈபிஎஸ் குறி.!!
ADMK in strong position in Tamilnadu loksabha election
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான காலம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவித்தபோது அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என பல தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தன.
ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. அதிமுக தமிழகத்தில் 39 தொகுதிகளில் வெற்றி தரவில்லை என்றாலும் 15 தொகுதிகளில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என தற்போதைய நிலவரம் தெரிவிக்கிறது.

அதுவும் அதிமுக செல்வாக்கு மிக்க ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, திருச்சி, நாமக்கல், மதுரை, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில தொகுதிகள் அந்த பட்டியலில் வருகின்றன. அதேபோன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை உள்ளிட்ட தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் அதிமுகவுக்கு கடும் போட்டியாக எதிர்த் தரப்பினர் இருப்பதால் கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பு அதிமுக பக்கம் சாயலாம் என தற்போதைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில் விருதுநகர், கடலூர், ஆகிய தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளரை நிறுத்தி உள்ள தேமுதிகவுக்கு குறிப்பிடத் தகுந்த வாக்கு சதவீதம் இருப்பதால் வெற்றிக்கு நெருக்கத்தில் இருப்பதாகவும், குறிப்பாக விருதுநகரில் போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பு வெற்றியை சாதகமாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் வடசென்னை மற்றும் தென் சென்னையில் அதிமுகவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தற்போதைய கள நிலவரத்தில் வெளிப்படுகிறது. திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் தென் சென்னையின் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சாதகமாக இருந்த தேர்தல் களத்தை சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெள்ளம் குறித்து பேசி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்ட தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அதிமுக பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் பங்கேற்கும் அனைத்து பொது கூட்டங்களிலும் வீடியோ மற்றும் புகைப்படத்தை காட்டி பொதுமக்கள் மத்தியில் பேசும் யுத்தி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று சமூக ஊடகங்களில் இளைஞர்களின் வாக்குகளை கவரும் வண்ணம் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதுப்புது பிரச்சார யுத்திகளை கையாண்டு வருகிறது. ஆட்சியாளர்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி வெளியிடப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. அனைத்து தளங்களிலும் தீவிரமாக வேலை செய்யும் அதிமுக தரப்பு எதிர்வரும் மக்களவைப் பொது தேர்தலில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என நம்பிக்கையுடன் கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.
English Summary
ADMK in strong position in Tamilnadu loksabha election