பிரேமலதா விஜயகாந்த்-க்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக கள அரசியலில் ஈடுபடாமல் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளராக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிகவின் அடுத்த பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். 

 

இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தங்களின் கட்சிப்பணி  சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிதவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Wish to DMDK Premalatha Vijayakanth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->