பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஜூலை 7-ஆம் தேதி கோவையில் தொடங்கிய அவரது பிரசார பயணம், 23-ஆம் தேதி தஞ்சையில் நிறைவடைந்தது. தொடர்ந்து 2 மற்றும் 3-ஆம் கட்ட பயணங்களையும் முடித்த அவர், செப்டம்பர் 1-ஆம் தேதி மதுரையில் 4-ஆம் கட்டத்தைத் தொடங்கி தற்போது தொடர்ந்து வருகின்றார். இந்த பயணம் செப்டம்பர் 13-ஆம் தேதி கோவையில் நிறைவடைகிறது.

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 17-ஆம் தேதி தர்மபுரியில் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார். அன்றைய தினம் பாப்பி ரெட்டிபட்டி மற்றும் அரூர் தொகுதிகளில் உரையாற்றவுள்ளார். 18-ஆம் தேதி பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளில், 19-ஆம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார்.

20-ஆம் தேதி நாமக்கல், பரமத்திவேலூர் தொகுதிகளில், 21-ஆம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 22-ஆம் தேதி ஓய்வு எடுத்த பிறகு, 23-ஆம் தேதி குன்னூர், ஊட்டி தொகுதிகளிலும், 24-ஆம் தேதி கூடலூர் தொகுதியிலும் பயணம் செய்கிறார்.

25-ஆம் தேதி வேடசந்தூர், கரூர் தொகுதிகளில் உரையாற்றும் எடப்பாடி பழனிசாமி, 26-ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் தனது 5-ஆம் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார்.

இந்த வகையில் தொடர்ச்சியான சுற்றுப்பயணங்கள் மூலம் மக்களுடன் நேரடியாக சந்தித்து ஆதரவை பெறும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Edappadi Palaniswami election campaign dharmapuri


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->