அந்த ஒரு சீட்டில் சிக்கல்.! இன்று மீண்டும் அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தை.!  - Seithipunal
Seithipunal


நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனை அடுத்து அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. இன்று அல்லது நாளை இறுதிமுடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. தேமுதிக தரப்பில் 20 முதல் 23 தொகுதிகள் கேட்பதாகவும், அதிமுக தரப்பில் 12 முதல் 14 தொகுதிகள் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் தேமுதிக தரப்பில் தொகுதிகள் குறைக்கப்படும் பட்சத்தில் எங்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதிமுக தரப்பில் தேர்தல் முடிந்த பிறகு அதனை பேசிக்கொள்ளலாம், இப்போது தொகுதிப் பங்கீட்டை முடித்துக் கொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக இப்போதே பேசி முடியுங்கள் என்று சொல்லி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான தகவலின் படி அதிமுக-தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடு சுமுகமாக முடியவே வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk dmdk alliance march 3


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->