கேள்வி கேட்டால் கேலி, கிண்டலா? கொந்தளித்த சிவி ஷண்முகம் எம்பி!
ADMK CV Shanmugam Condemn to DMK And DMK Govt
விழுப்புரம் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் முன்பு, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம் எம்.பி., "அ.தி.மு.க ஆட்சியில் குறைந்த விலையில் கொடுக்க முடிந்த சிமெண்டை, தி.மு.க அரசால் ஏன் கொடுக்க முடியவில்லை? மணல் கொள்ளையை தடுக்க செல்லும் அதிகாரிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.
மக்களுக்காக ஸ்டாலின் என்ன செய்தார்? வாக்களித்த மக்கள் குறித்து ஸ்டாலின் நினைத்துக் கூட பார்க்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
கொடுத்த வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் கேலி, கிண்டலாக தி.மு.க அரசு பேசி வருகிறது. 26% கமிஷன் தான் தி.மு.க ஆட்சி, எங்கு திரும்பினாலும் கமிஷன், கரப்ஷன் தான்.
திமுக ஆட்சியும், கட்சியும் மன்னராட்சி போல் ஆகிவிட்டது" என்று சி.வி.சண்முகம் பேசினார்.
மின் கட்டணம், சொத்துவரி உயர்வு உள்ளிட்ட தமிழக மக்களை வாட்டி வரும் திமுக அரசை கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் ப.மோகன் தலைமையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேற்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் பூவிருந்தவல்லி அடுத்த குமணன்சாவடியில் முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் ஆர்ப்பாட்டம், அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
English Summary
ADMK CV Shanmugam Condemn to DMK And DMK Govt