#BigBreaking | அதிமுக பொதுக்குழு வழக்கில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் கடும் கண்டனத்தை தெரிவித்த நீதிபதி.! - Seithipunal
Seithipunal


சட்டவிதிகளை மாறாக நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி,  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலை கட்சியில் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கு நாளை இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக பொதுக்குழு நிர்வாகிகள் நியமனம், உட்கட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு அமர்வை அமைக்க கோரி, உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் இடம், மனுதாரர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் கே சி பழனிசாமி ஆகியோர் கடிதம் வழங்கியுள்ளனர்.

இந்த கடிதம் கொடுத்த மனுதாரர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், வேறு நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுப்பதுதான் வேலையா? என்று நீதிபதி காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk case ops vs eps kc palanisami son appeal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->